Rஉலக யோகா தினம்: லக்னோவில் மோடி!

public

�நரேந்திர மோடி பிரதமரானதும் இந்தியா சார்பில் முயற்சிகள் எடுத்து ஜூன் 21ஆம் தேதியைச் சர்வதேச யோகா தினமாக ஐ.நா-வை அறிவிக்கக் செய்தார். அதன்படி இன்று மூன்றாவது சர்வதேச யோகா தினமாகும்.

உலகின் இருநூறு நாடுகளில் இன்று யோகா தினம் கொண்டாடப்படுகிறது. மற்ற நாடுகளைவிட யோகாவின் தாய் மண்ணான இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சென்ற வருடம் பிரதமர் மோடி டெல்லியில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிலையில் இந்த வருடம் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடக்கும் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் பிரதமர் மோடி.

யோகா தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் தளத்தில் பத்து ஆசனங்களை சிபாரிசு அதை செய்வது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளார் மோடி.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு பிரதமர் கலந்துகொள்ளும் விழா என்பதால் சர்வதேச யோகா தினத்தை அம்மாநில அரசு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

மேலும் இன்றைய தினம் பிரதமர் மோடியோடு, நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களும் கலந்துகொண்டு யோகா செய்ய உள்ளதாக உத்தரப்பிரதேச முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் அமைப்பின் தலைவர் ரயிஸ் கான் தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *