இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டுவர புதிய கமிட்டியை மத்திய அரசு அமைத்துள்ளது.
2020ஆம் ஆண்டுக்குள் 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவதற்கான செயல்திட்டத்தை உருவாக்கும் நோக்கில் 5ஜி கமிட்டியை மத்திய அரசு செப்டம்பர் 26ஆம் தேதியன்று அமைத்தது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரான மனோஜ் சின்கா பேசுகையில், “5ஜி தொழில்நுட்பத்துக்கான திட்டங்களுடனும், தொலைநோக்குப் பார்வையுடனும் செயல்பட உயரதிகாரிகளைக்கொண்ட 5ஜி கமிட்டியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். 2020ஆம் ஆண்டில் உலக நாடுகள் 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கும்போது, இந்தியாவும் அவற்றுக்கு இணையான நிலையில் இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் பேசினார்.
5ஜி குறித்த ஆராய்ச்சி மற்றும் பொருள் தயாரிப்புக்கு நிதியுதவி வழங்க சுமார் 500 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கத் திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 5ஜி தொழில்நுட்பத்தின் கீழ், நகர்ப்புறப் பகுதிகளில் 10,000 மெகா பைட் வேகத்திலும், கிராமப்புறப் பகுதிகளில் 1000 மெகா பைட் வேகத்திலும் இணைய வசதியை வழங்க அரசு திட்டமிட்டு வருகிறது. தொலைத்தொடர்பு துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள் இக்கமிட்டியில் இடம்பெறுவர்.�,