வேதிகா நடிக்கவுள்ள புதிய படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளன.
வேதிகா 2006ஆம் ஆண்டிலேயே திரைத்திறையில் கதாநாயகியாக அறிமுகமாகி முனி, காளை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் 2013ஆம் ஆண்டில் பாலா இயக்கத்தில் வெளியான பரதேசியும், 2014ஆம் ஆண்டு வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான காவியத் தலைவனும் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தன. இரு படங்களும் அவருக்கு தமிழில் அடுத்தடுத்து பல வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மலையாளம், கன்னடம், ஆகிய திரையுலகில் நடித்த வேதிகா அதன்பின் தமிழில் கதாநாயகியாக நடிக்கவில்லை.
தற்போது ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடித்துள்ள காஞ்சனா 3 திரைப்படத்தைப் பெரிதும் எதிர்பார்த்துள்ளார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் புதிய படத்தில் வேதிகா இணைந்துள்ளார். இந்தப் படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளன.
தெலுங்கு நடிகர் ஆடி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் விக்னேஷ் இயக்குகிறார். ஆரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 25ஆம் தேதி தலக்கோணத்தில் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து வேதிகா ஜீது ஜோசப் இயக்கத்தில் பாலிவுட்டிலும் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
�,”