மனித இனத்துக்கு ஆதாரமாக விளங்கும் நீர்வளங்களை பாதுகாப்பதுடன் நீர் சேமிப்பு தொடர்பாக விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு வறட்சியின் மத்தியில் உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக பல விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அரசியல் தலைவர்களும் தங்களின் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
அவ்வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “உலக தண்ணீர் தினத்தையொட்டி நாம் ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க உறுதி எடுக்க வேண்டும். மக்கள் சக்தி முடிவு செய்கையில் நம்மால் நீர் சக்தியை வெற்றிகரமாகப் பாதுகாக்க முடியும். கழிவுநீரை சுத்திகரிப்பை ஐ.நா. சபை இந்த ஆண்டு சரியான இலக்காக தேர்வு செய்துள்ளது. தண்ணீர் மறுசுழற்சி மற்றும் அதன் அத்தியாவசியம் பற்றி விழிப்பு உணர்வுக்கு ஐ.நா. சபையின் இந்த நடவடிக்கை மேலும் உதவியாக இருக்கும்”என்று குறிப்பிட்டுள்ளார்.�,