�
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாகனத் தயாரிப்புக்காக வோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடா நிறுனங்களுடன் நீண்டகால அடிப்படையிலான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடா ஆட்டோ ஆகிய இரு நிறுவனங்களுடன் இணைந்து வாகனத் தயாரிப்பை மேற்கொள்ள டாடா மோட்டார்ஸ் முடிவுசெய்துள்ளது. இதற்கான நீண்டகால புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் குன்ட்டர் பட்செக், வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மாத்யூஸ் முல்லர், ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பெர்னார்டு மேயர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த மூன்று நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாகும் முதல் வாகனத்தை வருகிற 2019ஆம் ஆண்டில் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டின் ஜூலை மாதம் முதலே நடந்துவந்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் எங்களுக்குள்ளான வலிமைகளைத் தெரிந்துகொண்டு, இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் புதுப்புது கண்டுபிடிப்புகளை வெளியிட இயலும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,