உணவு பதப்படுத்தும் துறைக்கு நிதியுதவி வழங்க ரூ.2000 கோடி முதலீட்டில் வங்கி சாரா நிதி நிறுவனத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கலந்துகொண்டு பேசும்போது, இந்தியாவில் கடந்த நான்கு வருடங்களில் 15 உணவுப் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்குப் பல்வேறு வகையில் நிதியுதவிகளை வழங்கி, அதன் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி வருகிறோம். இத்துறையில் இதுவரையில் ஒரு பில்லியன் டாலர் அளவிலான அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதனால் உணவு பதப்படுத்தும் திறன் 350 விழுக்காடு அளவிற்கும், உணவு குளிர்பதனத் திறன் 720 விழுக்காடு அளவிற்கும் வளர்ந்துள்ளது.
இத்துறையில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதோடு, ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயப் பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்திடம் பணம் இருக்கிறது. இருப்பினும் எங்களோடு இணைந்து இந்தத் துறையை மேம்படுத்தத் தனியார் நிறுவனங்களின் உதவி தேவை. உணவு பதப்படுத்தும் துறையின் வளர்ச்சியை ஊக்குவித்து விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் வகையில் பல்வேறு முயற்சியை அரசு மேற்கொண்டு வருகிறது. உணவைப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு நிதியளித்து உதவும் வகையில் ரூ.2000 கோடி அளவிலான வங்கி சாரா நிதி நிறுவனம் அமைக்கப்படும்” என்று உறுதியளித்தார்�,”