கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஹர ஹர மகாதேவகி’. சந்தோஷ்.பி.ஜெயகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை ப்ளூ ஹோஸ்ட் புரொடக்ஷன், தங்கம் சினிமாஸ் தங்கராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்டம்பர் 10) மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் படத்தின் கதாநாயகி நிக்கிகல்ராணி பேசும்போது, **டார்லிங் படத்தின் மூலம் என்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் இந்த படத்தின் கதையைக் கேட்கும்படி கூறினார். இயக்குநர் சந்தோஷ் என்னிடம் சொன்ன கதையைக் கேட்டு சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது. என்னிடம் கதை சொன்ன போது நான் நடிக்கும் போர்ஷனில் வரும் விஷயங்களை மட்டும் தான் கூறினார். இப்போது இங்கே வந்த பிறகு தான் கதை, திரைக்கதை, வசனம் என்று அனைத்தும் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வருகிறது. படத்தின் காட்சிகள் அனைத்தும் நன்றாக உள்ளது. கௌதம் கார்த்திக் எனக்கு நல்ல நண்பன். எனக்குத் தமிழ் சரியாகத் தெரியாததால், அவர் எனக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தார்”** என்று கூறினார்.
விழாவில் கௌதம் கார்த்திக் பேசும்போது, “இந்த கதை பலருக்கும் சென்று இறுதியில் என்னைத் தேடி வந்துள்ளது. இயக்குநர் சந்தோஷ் என்னிடம் கதை சொல்ல வந்தபோது முதலில் எனக்கு இப்படத்தின் பாடல்களை தான் போட்டு காண்பித்தார். பாடல்களை நான் மிகவும் ரசித்து, சிரித்துக் கேட்டேன். பாடல்களைக் கேட்டதும் இந்த கதையில் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதன் பிறகு இயக்குநர் என்னிடம் ஹர ஹர மகாதேவகியின் கதையை கூறினார். எனக்குக் கதை மிகவும் பிடித்திருந்தது. இப்படம் தமிழ் சினிமாவுக்கு புதுமையான படமாக இருக்கும். இந்த படத்தை தொடர்ந்து இதே குழுவோடு மீண்டும் ஒரு படத்துக்காக இணைய உள்ளேன்”** என்று கூறினார்.�,”