gஒரு ராமர் கோயிலை கூட கட்டாத மோடி: மம்தா

public

நரேந்திர மோடி ஏன் இன்னும் ஒரு ராமர் கோயிலைக்கூட கட்டவில்லை என்று மம்தா பானர்ஜி கேள்வியெழுப்பியுள்ளார்.

அண்மையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாகனத்திற்கு அருகே ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஜர்க்ராம் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, “ஜெய் ஸ்ரீராம் என துதி பாடியவர்களை மம்தா பானர்ஜி சிறையில் அடைத்துள்ளார். நானும் அதேபோல துதி பாடி மம்தா பானர்ஜியை வரவேற்கலாம் என நினைக்கிறேன். அப்போது என்னையும் அவர் சிறையில் அடைப்பார் அல்லவா? அதன்பின்னர் ராமருக்கு துதி பாடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி நபர்களுக்கு நான் உதவுவேன்” என்று கூறினார்.

இந்நிலையில், பிஷ்ணுபூரில் நேற்று (மே 7) நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நரேந்திர மோடி ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுகிறார். ஆனால் அவர் ஒரு ராமர் கோயிலையாவது கட்டியிருப்பாரா? தேர்தல் வரும்போது மட்டும் ராமர் உங்களது தேர்தல் ஏஜெண்டாக மாற்றப்படுகிறார். தேர்தல் நேரத்தில் நீங்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடுவது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் கோஷமிடும்படி கட்டாயப்படுத்துகிறீர்கள்.

கோஷங்களை உங்களால் மற்றவர்கள் மீது திணிக்க முடியாது. நாங்கள் ராமரை மதிக்கிறோம். ராமருக்கு எவ்வாறு மரியாதை அளிக்க வேண்டுமென எனக்கு தெரியும். ஜெய்ஹிந்த், வந்தே மாதரம், மா மாதி மனுஷ் எர் ஜெய், திருணமூல் காங்கிரஸ் எர் ஜெய் என நான் பல முழக்கங்களை எழுப்புவேன். ஆனால் பாஜக மக்கள் மீது திணிக்க விரும்பும் முழக்கங்களை நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன்” என்று கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *