பிரபு தேவா, ஹன்சிகா நடிப்பில் உருவாகிவரும் ‘குலேபகாவலி’ திரைப்படம் பொங்கல் கொண்டாட்டமாக வெளிவரவுள்ளது.
கல்யாண் இயக்கிவரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களாக ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், ‘முனீஸ்காந்த்’ ராமதாஸ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விவேக் – மெர்வின் இணைந்து இசையமைக்க, ஆனந்த குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் வேலுக்குட்டி படத் தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார்.
அறம் படத்தைத் தொடர்ந்து இப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தயாரித்துவருகிறார். எஞ்சியுள்ள ஒரு பாடல் காட்சிக்காகத் தொங்கும் தோட்டமான பாபிலோன் தோட்டத்தைப் போல கார்களைக் கொண்டு செட் அமைத்து சென்னையில் படமாக்கப்பட்டது. தற்போது இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்றுவருகின்றன.
படத்தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட இருப்பதாக கேஜேஆர் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் [போஸ்டர்](https://twitter.com/kjr_studios/status/936245199939936256) ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
பொங்கல் திருநாளில், சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விஷாலின் ‘இரும்புத்திரை’, ஆர்.கே.சுரேஷின் ‘பில்லா பாண்டி’ ஆகிய 3 படங்களும் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.�,