Cகனமழை: வானிலை எச்சரிக்கை!

public

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூலை 20) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், வங்கக் கடலில் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தேனி,திண்டுக்கல், நெல்லை,கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *