Jஒரே நாளில் 55 மீனவர்கள் கைது!

public

I

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகத் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். அதன்படி இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 43 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் 6 விசைப் படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சூழலில் இன்று மேலும் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மண்டபம் தென்கடல் பகுதியிலிருந்து மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்ற விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். இன்று மதியம் நெடுந்தீவு தலைமன்னாருக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தங்கச்சி மடத்தைச் சேர்ந்த சபரிதாஸ் அவரது அண்ணன் அருளானந்தம் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப் படகுகளையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

இவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே 43 பேர் தற்போது 12 பேர் என ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 55 பேர் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கைதான அனைவரையும் விடுவிக்க வலியுறுத்தி நாளை ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *