கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், குழந்தைகளுக்கான அரை டிக்கெட் கட்டணம் நீக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பில் சில திருத்தங்கள் செய்து, புதிய முறையை ரயில்வே அமைச்சகம் இப்போது அறிவித்திருக்கிறது. அரை டிக்கெட் கட்டணத்திற்கு தனி பெர்த் வசதியோ, இருக்கையோ ஒதுக்கப்படாது. சிறுவர்கள், பெற்றோர் அல்லது சேர்ந்து பயணம் செய்பவர்களின் அனுமதியுடன் இருக்கை இடத்தையோ, பெர்த் வசதியையோ பகிர்ந்து கொள்ளலாம். 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு இருக்கை வசதி தேவைப்பட்டால், முழுக் கட்டணம் பெறவேண்டும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கட்டணமில்லா வசதி தரப்படும். இதனால், ரயில்வே துறைக்கு ஆண்டிற்கு 525 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் அதிகரிக்கும் என்று ரயில்வே அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.�,
5 வயது குழந்தைக்கும் இனி ரயிலில் முழுக் கட்டணம்
+1
+1
+1
+1
+1
+1
+1