அதிகாலை பயணம்: விபத்தில் குழந்தை உள்பட நால்வர் பலி

public

திருப்பூர் பல்லடம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் ஒரு குழந்தை உள்பட நான்கு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரேசன், ஆனந்தி என்ற தம்பதியினர் ஒரு இருசக்கர வாகனத்திலும், மற்றொரு இருசக்கர வாகனத்தில் முருகன், அவரது மனைவி முத்துலட்சுமி, 3 வயது குழந்தை ஆகியோரும் இன்று அதிகாலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலை புத்தரச்சல் அருகே கோவையில் இருந்து மணப்பாறை நோக்கி சென்றனர்.

புத்தரச்சல் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்ற சரக்கு ஆட்டோ இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

அந்த வழியே சென்றவர்கள், இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆனந்தியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் குமரேசன், முருகன் அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் 3 வயது குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான சரக்கு ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *