டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் அரை நிர்வாணமாக 15வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு இன்று 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
அவர்களை சந்தித்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘விவசாயிகளுக்காகவே வாழ்ந்தவர் ஜெயலலிதா, அதேபோல்தான் விவசாயிகளின் நலன்களை தமிழக அரசு அரண்போல காத்து வருகிறது. மேலும் காவிரி நீரைத் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு இடப்பட்டும் கர்நாடகா மறுப்பு தெரிவித்து வருகிறது. விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம்’ என்று அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.�,
+1
+1
+1
+1
+1
+1
+1