மத்திய அரசு அனுமதி பெறவில்லை : அமைச்சர் குற்றச்சாட்டு!

public

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமலேயே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்துள்ளதாக சுற்றுசூழல் அமைச்சர் கருப்பண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு திட்டத்தை எதிர்த்து 14 நாட்களாக தீவிர போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி பெறவில்லை என்று தமிழக சுற்றுசூழல் அமைச்சர் கருப்பண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கருப்பண்ணன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து அனுமதி பெறாமலேயே திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடியை நேற்று சந்தித்தபோது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *