புதிய திட்டம்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு!

public

சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், குடிநீர் அல்லாத பிற பயன்பாட்டுக்குத் தேவைப்படும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைத் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:

குடிநீர் அல்லாத பிற பயன்பாட்டுத் தேவைகளான தோட்ட பராமரிப்பு, கழிவறை சுத்திகரிப்பு மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கு தேவைப்படும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரானது விற்பனைச் செய்யப்பட உள்ளது.

மேலும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை, குடிநீர் வாரியத்தின் சார்பில் கொடுங்கையூர், கோயம்பேடு, நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெற, 1000 லிட்டருக்கு ரூ.18.40 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து , சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைப் பெற விரும்புவோர் கொடுங்கையூர், கோயம்பேடு, செயற்பொறியாளர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வடக்கு-81449 30800, நெசப்பாக்கம், பெருங்குடி, செயற்பொறியாளர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தெற்கு-81449 30600. என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *