சிறுகுறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு!

public

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அண்மைக்காலமாக மேற்கொண்ட கொள்கை ஊக்குவிப்பு நடவடிக்கையால் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை மேம்படும் என்று அனில் கைதான் கூறியுள்ளார்.

பி.ஹெச்.டி. வர்த்தக மற்றும் தொழில்துறை சேம்பரின் தலைவரான அனில் கைதான் பிசினஸ் லைன் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், தற்போது சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மதிப்பு உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவிகிதமாக உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதன் மதிப்பு 25 சதவிகிதமாக அதிகரிக்கும். சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வளர்ப்பதற்கான பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது” என்றார்.

மேலும், மத்திய அரசு நடப்பு பட்ஜெட்டில் தொழிலாளர்களுக்கான நிலையான கால ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பயன்படுவதாக உள்ளது. அதேபோல ரிசர்வ் வங்கியின் வர்த்தகக் கொள்கை சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கால வரையறையை 90 நாட்களிலிருந்து 180 நாட்களாக உயர்த்தியுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான மேம்பாட்டிற்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் வழிவகுக்கும். சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைதான் நாட்டில் இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக உள்ளது” என்கிறார் கைதான்.

அண்மையில் மத்திய அரசு குறு நிறுவனங்களுக்கான ஆண்டு விற்றுமுதலை ரூ.5 கோடியாகவும், சிறு நிறுவனங்களுக்கான விற்றுமுதலை ரூ.5 கோடி முதல் ரூ.75 கோடி வரையிலும், நடுத்தர நிறுவனங்களுக்கான விற்றுமுதலை ரூ.75 கோடி முதல் ரூ.250 கோடி வரையிலும் நிர்ணயித்து மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *