இந்தியாவின் அலுமினியத் துண்டுகள் இறக்குமதி ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில் 21 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து *இந்திய அலுமினியம் சங்கம்* வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடப்பு நிதியாண்டின் (2018-19) ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் இந்தியா 6,57,000 டன் அலுமினியத்தை இறக்குமதி செய்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 3,12,000 டன்னும், இரண்டாவது காலாண்டில் 2,51,000 டன்னும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2017-18ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்தியாவின் அலுமினியம் இறக்குமதி 5,41,000 டன்னாக மட்டுமே இருந்தது’ என்று கூறியுள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் இறக்குமதியால் உள்நாட்டுச் சந்தை பாதிப்படைகிறது, எனவே இறக்குமதியைக் கட்டுப்படுத்த வேண்டுமெனவும் இந்திய அலுமினியம் சங்கம் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில், ‘தரமில்லாத வெளிநாட்டு அலுமினியங்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த வேண்டும். வாகனத் தயாரிப்பு, கட்டுமானம், நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது. தரக்குறைவான அலுமினியத்தைக் கொண்டு தயாரித்தால், அந்தப் பொருளின் தரம் என்னவாகும் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும். எனவே உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதிக்காத வண்ணம் அலுமினியம் இறக்குமதிக்கு அதிகபட்ச வரி விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது�,