தீபாவளிக்கு வந்த இனிப்பு வகைகளில் எதை சாப்பிடுவது, எதை சாப்பிடாமல் விடுவது என்று நினைத்தவர்களுக்கு ரிலாக்ஸ் டைமில் இந்த ஓட்ஸ் பேரீச்சை பர்ஃபி செய்து கொடுங்கள். புத்துணர்வு பெறுவார்கள். தீபாவளி கொண்டாடிய மகிழ்ச்சியை அடைவார்கள்.
**எப்படிச் செய்வது?**
விதை நீக்கிய கால் கப் பேரீச்சையைப் பொடியாக நறுக்கி அதனுடன் கால் கப் காய்ந்த திராட்சையைக் கலந்துகொள்ளவும். ஒரு கப் ஓட்ஸை வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும். டிபார்ட்மென்டல் கடைகளில் கிடைக்கும் டார்க் சாக்லேட்டை தேவையான அளவு அடுப்பில் வைத்து, உருக்கி இதனுடன் ஓட்ஸ், பேரீச்சை துண்டுகள் காய்ந்த திராட்சை கலவை ஆகியவற்றை நன்கு கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து, நன்றாக செட் ஆனதும் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.
**சிறப்பு**
நீரிழிவாளர்களுக்கும், பெண்களுக்கும் ஏற்றது. எடையைக் குறைக்கும்; புத்துணர்ச்சித் தரும்.�,