‘ராஜாவுக்கு செக்’ அப்படின்னு மட்டும் சொன்னான் டீக்கடை பையன். நீ எதைடா சொல்றன்னு கேட்டா, நீ எதை பத்தி நினைச்சன்னு சொல்லுண்ணா அப்டின்றான். டேய் நான் நேர்மையா சொல்லுவேன் நீ சொல்லுவியான்னு கேட்டேன். சொல்றேன்னான். எச்.ராஜா மேல குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யச் சொல்லி கோர்ட் ஆர்டர் போட்டிருக்கே அதைத்தான சொன்ன அப்டின்னு கேட்டேன். இல்லைன்னான். சரி, ஓ.பி.எஸ் தம்பி ராஜாவை பதவி விலக சொல்லியிருக்காங்களே அதைத்தான சொல்ற அப்டின்னேன். அதுவும் இல்லைன்னான். அப்பறம் வேற எதடா சொன்னன்னு கேட்டா, சேரப்பா ஆக்டிங்ல ‘ராஜாவுக்கு செக்’னு ஒரு படம் வந்திருக்கு. நாளைக்கு அந்தப் படத்துக்கு போக டிக்கெட் போட்டிருக்கேன் அதை சொல்ல வந்தேன் அப்டின்றான். இப்படித்தான் திமுகவை பத்தி கே.எஸ்.அழகிரி ரிலீஸ் பண்ண அறிக்கைக்கு திமுக-காங்கிரஸ் சண்டை போட்டுது. அதுகூட பரவால்லைங்க, ‘பொன்னார் நல்ல மனுசனாச்சே. ஏன் இப்டி பண்றாப்ள’ன்னு ஜெயக்குமார் கேட்டதுக்கே பொன்னார் கோவப்பட்டுட்டார். கூட்டணியை இந்த மாதிரி வெச்சிக்கிட்டு, இவங்க ஆட்சி செஞ்சு நான் என் பதினஞ்சு லட்சம் கடனை எப்படி அடைக்கப்போறனோ. சரி, நீங்க அப்டேட்டைப் படிங்க. நான் போய் வட்டியை கட்டிட்டு வர்றேன்.
**டீ**
எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா வர்ற ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் பாட்ஷா போட்ட உடனே திரும்பவும் எல்லோரும் ரஜினி, ஸ்கிரீன் பிரசென்ஸ், மாஸ், ஸ்டைல், வசூல் அப்படின்னு மாறிடுவாங்க.
**இடும்பாவனம் கார்த்தி**
எல்லாவற்றுக்கும் பேசுகிற இயக்குனர் பா.இரஞ்சித், ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து மட்டும் இதுவரை ஏன் வாய்திறக்கவில்லை என்று கேட்டு வந்தேன். தற்போது பெரியார் குறித்த ரஜினிகாந்தின் வன்மம் நிறைந்த பேச்சுக்கும் வாய் திறக்கவில்லை.
**Sonia Arunkumar**
இந்த ரெண்டு மூணு நாள்ல நம்ம அமைச்சர்கள் மீதே அவ்ளோ மரியாதை வந்துருச்சு. நன்றி rajinikanth சார்
**ச ப் பா ணி**
நவீன மனிதன் ‘இரு Cell’ உயிரி
**Indiavaasan**
கட்டற்ற ஆணவம் என்ன செய்யும்? அது தனக்கான சவக்குழியை தானே தோண்டிக்கொள்ளும்!
**சிலந்தி™**
முதலிரவு என்பது.. வரும் அனைத்து இரவுகளிலும் நினைத்து பார்க்க கூடியதாய் அமைய வேண்டும்..!!
**எழில்விழி**
என் இதயத்தை காணோம்!!
தேடி திரிந்த நிழலுக்கு
என் இதயம்
உன் வீட்டின் முன் இருப்பதாக
ஒரு தகவல் கிடைத்து.
என் உடலும்,நிழலும்
அங்கு சென்று இதயத்தை
கையும் காலுமாய் பிடித்து
என்னுடன் வா என்று அடித்து
தர தர வென்று இழுத்தும்
நான் வரமாட்டேன் என்று
கண்ணீர் வடித்து
கதறி அழுகின்றாள்!!!
**மாஸ்டர் பீஸ்**
அழுக்கு துணிகள் கிடக்கும் பக்கெட்டை தூக்குவதை விட, துவைத்த ஈர துணிகள் இருக்கும் பக்கெட் தூக்குவதற்கு பாரமாகத்தான் இருக்கும்!
அதுபோலத்தான், பொய்யை விட உண்மை சில நேரம் ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும்!
**ஜோக்கர்…**
ஆண்ட பரம்பரைஸ் ~ இந்தா இருக்காரே நேதாஜி, இவர் எங்க சொந்தம்தான். ஆனா இது அவருக்கே தெரியாது.
**பிரியாமனவள்…**
லவ் vs அரேன்ஜ் மேரேஜ்…..
மனப் பொருத்தத்தை மட்டும் பார்த்து திருமணம் செய்வது “லவ் மேரேஜ்”
மனப் பொருத்தத்தை தவிர மற்ற எல்லாப் பொருத்தங்களையும் பார்ப்பது “அரேன்ஜ் மேரேஜ்”
**Mr.பழுவேட்டரையர்**
ராவணனால் சீதையின் கண்ணியம் கெடவில்லை. எவனோ ஒரு விவரம் கெட்ட அயோத்தி அரைவேக்காடு, பரப்பி விட்ட சந்தேகத்தை நம்பி தான் ராமன் சீதையை தீக்குள் தள்ளினான்.
அது போல், தந்தை பெரியார் ராமனை அம்மணமாக ஊர்வலம் கொண்டு செல்லவில்லை. எவனோ ஒரு போயஸ் கார்டன் வாசகன் தான் அந்த செயலை செய்தான்.
**ச ப் பா ணி**
பிரிந்தும் பிரியாத ஹெட்போன் சிக்கலே..
**கோழியின் கிறுக்கல்!!**
உங்களுக்கு எட்டாத பந்தை அவுட் என்று சொல்வதை உலகம் எப்படி ஏற்றுக் கொள்ளும்!?
**மகிந்தன்**
‘உனக்காக சாமிகிட்ட வேண்டிகிட்டேன்’ என்று நீ சொல்வதிலிருக்கும் போதைக்காகவேனும் இருந்துவிட்டுப் போகட்டும் கடவுள்.
**மாஸ்டர் பீஸ்**
இங்கன நம்ம பிரதமர்ல இருந்து அமெரிக்கா அதிபர் வரையிலும் கடுமையா விமர்சனம் பண்ணுவோம்,
ஆனா நம்ம லோக்கல் வார்டு மெம்பர், கவுன்சிலரா பார்த்தா கோபமா கூட மூஞ்ச வச்சிக்க மாட்டோம் எல்லாம் டிசைன்!
**Ashok Srinithi**
ஸ்டாலின் திமுகவை வளர்த்தாரா என்று தெரியவில்லை..
ஆனால் எடப்பாடியாரை வளர்த்துவிட்டது ஸ்டாலின் தான்.
“ஆக எடப்பாடி பதவி விலக வேண்டும்” என்று மணிக்கு மூன்று முறை சொல்லியே வளர்த்திவிட்டார் !!
வாழ்த்துக்கள் ஸ்டாலின் !!
**ஜோக்கர்… **
பசிக்கும் போது கிடைக்கும் “பழையசோறின் அருமை”
பசியை போக்கிய பின் கிடைத்திடும் “பிரியாணியில்” இருப்பதில்லை.
**ஒரு தல இராவணன்**
எல்லாரும் இந்தியா சுதந்திரத்துக்காக காந்தி தான் போராடினார் காந்தி தான் எல்லாம்னு சொல்லிட்டிருக்கும்போது ஒருத்தர் மட்டும் தனக்குனு ஒரு படையவே ஆங்கிலேயருக்கு எதிரா உருவாக்கி வச்சுருந்தாரு…..
**பருத்தி மூட்டை**
நாம் வாழ்க்கையைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் வாழ்க்கை தான் நம்மைத் தேடி அலைந்து கொண்டு இருக்கிறது. சரியான திசையில் ஒரு அடி நாம் எடுத்து வைக்கும் பட்சத்தில் வாழ்க்கை நம்மை நோக்கி பத்து அடி எடுத்து வைக்கும்.
-லாக் ஆஃப்.
�,”