ஐபிஎல் போட்டிக்கு ஆபத்து?

entertainment

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஊழியர் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் போட்டிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

14ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி வருகிற 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இரண்டாவது ஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கிடையே மும்பை வான்கடே மைதான ஊழியர்கள் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு இரண்டு வீரர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி அணியை சேர்ந்த அக்‌ஷர்பட்டேல், பெங்களூரு அணியைச் சேர்ந்த படிக்கல் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் தற்போது கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. மும்பையில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஐபிஎல் போட்டி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மைதான ஊழியர்கள் பாதிக்கப்பட்டதோடு அங்கு கொரோனாவின் ஆபத்தும் இருக்கிறது.

இதனால் மும்பையில் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டியை வேறு இடத்துக்கு மாற்றலாமா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில் பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இந்த கொரோனா வைரஸ் பரவுவதைச் சமாளிக்க, தடுப்பூசி போடுவதே ஒரே தீர்வு என்று நான் நினைக்கிறேன். வீரர்களுக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்று பிசிசிஐயும் அந்த வழிகளில் சிந்தித்து வருகிறது. கொரோனா வைரஸ் எப்போது முடிவடையும் என்று யாருக்கும் தெரியாது, அதற்கான காலக்கெடுவை நீங்கள் கொடுக்க முடியாது. அந்தக் காலக்கட்டத்தில், அது இருக்காது, எனவே வீரர்கள் எளிதாக விளையாட முடியும். எனவே, இப்போது அதைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.

கொரோனா பாதிப்புகள் அதிகரித்துவரும்நிலையில், பிசிசிஐ சார்பில் ஐபிஎல் போட்டிகளுக்கான முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். வீரர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான திட்டம் உள்ளது. இதற்காக மத்திய சுகாதாரத்துறையுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது” என்று ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

மேலும், மராட்டிய மாநிலத்தில் தற்போது கொரோனா மிக வேகமாக பரவி வருவதால் மும்பையில் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டியை ஹைதராபாத் அல்லது இந்தூரில் நடத்துவது குறித்தும் அதேநேரத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் அனைத்து நகரங்களையும் கிரிக்கெட் வாரியம் தீவிரமாகக் கண்காணித்தும் வருகிறது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *