தேமுதிக தலைவரும், நடிகருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ‘அவரது ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்லை அவர் செய்த புண்ணியமும் மீனாட்சி அம்மனும் அவரை விரைவில் குணப்படுத்தும்’ என நடிகர் சூரி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு
நீரிழிவு நோய் காரணமாக சமீபத்தில் அவரது வலது கால் விரல்கள்அகற்றப்பட்டன.
இதனையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் பூரண நலம்பெற வேண்டி அவரது ரசிகர்களும், கட்சியினர், அரசியல் திரையுலக பிரபலங்களும் பிரார்த்தனை மேற்கொண்டதோடு, விரைவில் நலம்பெற வேண்டும் என வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.
இந்நிலையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவரும், நடிகருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் விரைவில் குணமாக வேண்டும் என காமெடி நடிகர் சூரி உருக்கமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘தங்கமான மனுசன், உதவின்னு யார் கேட்டாலும் வாரிவழங்கிய கர்ணன்; ஒரு காலத்தில் அவர் ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல, எல்லாருக்குமான அண்ணசத்திரமா இருந்துச்சு. கேப்டன் விஜயகாந்த் சார், நீங்க செய்த புண்ணியமும் மீனாட்சி அம்மனும் உங்களை விரைவில் குணப்படுத்தும், என பதிவிட்டுள்ளார்.
**- இராமானுஜம்**
.