விக்னேஷ் சிவனின் குழப்பமான 66 கோடி ரூபாய் அறிவிப்பு

entertainment

ிக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

இப்படம் விமர்சன ரீதியாக பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் போட்டிக்கு வேறு படங்கள் இல்லாத காரணத்தால் டீன் ஏஜ்காரர்கள் விரும்பி பார்த்தனர் முன்னணியில் உள்ள இரண்டு கதாநாயகிகள், புஷ்பா படத்தில் சமந்தாவின் உச்சகட்ட ஆபாச நடனம் அதன்பின் தமிழில் அவர் நடிப்பில் வெளியாகும் படம் என பல்வேறு காரணங்கள் நகர்புறங்களில் வசூலை குவிக்க காரணமானது.

புறநகர் பகுதிகளில் மோசமான வசூலை எதிர்கொண்ட காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி நேற்றுடன் ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் 66 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

“எங்களது பணியில் திருப்தி அடைவதற்குப் போதுமான காரணங்களைத் தந்ததற்காக, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு நன்றி.
உங்களை மனதில் வைத்து ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்க விரும்பினோம். நீங்கள் வாங்கிய ஒவ்வொரு டிக்கெட்டிலும் உங்கள் அன்பைக் காட்டியுள்ளீர்கள். உங்கள் அன்பிற்கு எப்போதும் நன்றியுள்ளவன்,என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனமோ, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் தயாரிப்பாளர் 7ஸ்கீரீன் லலித்குமார் ஆகியோர் படத்தின் வியாபாரம், வசூல் பற்றிய எந்த தகவலையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 66 கோடி ரூபாய் என்பது திரையரங்குகள் மூலம் கிடைத்த வசூலா அல்லது படத்தின் மொத்த வியாபாரத்தின் மூலம் கிடைத்த தொகையா என்பதை விக்னேஷ் சிவன் குறிப்பிடவில்லை.

**-இராமானுஜம்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *