எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் – ஜூனியர் என்.டி.ஆர். ஆலியா பட், சமுத்திரகனி நடித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம், மார்ச் 25 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
படத்தின் கதைகளமான ஆந்திர – தெலங்கானா மாநிலங்களில் ஆர்ஆர்ஆர் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் முரட்டு ரசிகர்கள் திரையரங்கில், தங்கள் மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவார்கள் என்பதை அறியாத நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில், திரைக்கு முன்னே உள்ள மேடையில் ரசிகர்கள் ஏறாமல் தடுக்க கம்பி வேலியை திரையரங்க நிர்வாகம் அமைத்துள்ளது.
திரையில் நாயகர்களைப் பார்த்த உற்சாகத்தில் அந்த மேடையில் ஏறி ஆர்ப்பரிக்கும் ரசிகர்களால், திரைக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளதாக திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
**இராமானுஜம்**