]’விக்ரம்’ படத்தின் வெளியீட்டு தேதி!

entertainment

நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மாநகரம்’, ‘மாஸ்டர்’ படங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனுடன் முதன் முறையாக இணையும் திரைப்படம் ‘விக்ரம்’. இதில் விஜய்சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு இசை அனிருத்.

படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வந்த நிலையில் (கொரோனா காரணமாக இடையில் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது) சமீபத்தில் இந்த படத்தின் 110 நாட்களுக்கான படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு அறிவித்தது.

மேலும், இதன் படப்பிடிப்பு தன்னுடைய தேதிகளால் தாமதமாகி விடக்கூடாது என நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து பாதியில் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படத்தின் மேக்கிங் க்ளிம்ப்ஸ்ஸோடு வருகின்ற ஜூன் மாதம் 3ம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் திரையரங்குகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது.

நடிகர் கமல்ஹாசனும் படத்தின் க்ளிம்ப்ஸ்ஸை தன்னுடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாக உள்ளேன்’ என ட்வீட் செய்துள்ளார்.

அதேபோல, லோகேஷ் கனகராஜூக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லும் விதமாக அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ‘ரசிகராகத் தொடங்கி இயக்குநராக வளர்ந்து இன்று சகோதரராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜூக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு லோகேஷ் கனகராஜ், ‘இதை விட சிறந்த பிறவி பலன் வேறெதுவும் இல்லை. நன்றி ஆண்டவரே!’ என பதிலளித்துள்ளார். ‘விக்ரம்’ படத்தின் க்ளிம்ப்ஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்துகளை சொல்லி ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னதாக, விக்ரம் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் திரையரங்க வெளியீட்டிற்குப் பின்பான இணைய ஒளிபரப்பு உரிமையை ஹாட் ஸ்டார் இணையதளம் பெற்றது.

அதற்காக நூறு கோடி கொடுப்பதாக ஹாட்ஸ்டார் கூற, அதற்கு ஒப்புக்கொள்ளாத கமல்ஹாசன் 125 கோடி என்றால் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம். இதை எதிர்பாராத ஹாட்ஸ்டார் தரப்பு அதிர்ச்சியடைந்தாலும் வேறுவழியின்றி கமல்ஹாசன் கூறிய விலைக்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பொதுவாக வியாபார விஷயங்களில் கமல்ஹாசன் நேரடியாக தலையிடுவது இல்லை, மறைந்த அவரது சகோதரர் ஹாசன், மற்றும் அவரது நம்பிக்கைக்குரிய மேலாளர் டி.என்.எஸ் ஆகியோர் மட்டுமே பட வியாபாரங்களை கவனித்து முடிவு செய்துவந்தனர்.

தற்போது இருவருமே உயிருடன் இல்லை. அதனால் மற்றவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைத்திருந்தார் கமல். ஆனால் நம்பியவர்கள் நாணயமாக இல்லாமல் உள்குத்து வேலைகளை செய்கின்ற தகவல் கமல்ஹாசன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் கமல்ஹாசனே 100 கோடி என்பதை 125 கோடி என கூற அதற்கு ஹாட் ஸ்டார் ஒப்புக்கொண்டதன் மூலம் நம்பிக்கை துரோகம் பற்றிய தகவல்கள் உண்மை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளார் கமல்ஹாசன்.

இனி எல்லா விஷயங்களிலும் அவரே நேரடியாகக் களமிறங்கி வியாபாரத்தைபேசி முடிப்பார் என்கிறது ராஜ்கமல் நிறுவன வட்டாரங்கள்

**ஆதிரா, இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *