பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்?

entertainment

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற இருக்கிறார்கள்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24×7 என டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ளது. 24×7 என நேரலையில் ஒளிபரப்பாவதால் புகைப்பிடிக்கும் காட்சிகள், சண்டை காட்சிகள், வாக்கு வாதங்கள் என பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது. முதல் வாரமே நாமினேஷன் என அதிரடி காட்டியது பிக்பாஸ் அல்டிமேட். முதல் வாரத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற கடந்த வாரம் சுஜா வருணி வெளியேறி இருக்கிறார்.

இந்த நிலையில், இந்த வாரம் யார் வெளியேற போவது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது. ஜூலி, நிரூப், தாமரை, பாலாஜி முருகதாஸ். சிநேகன் அனிதா சம்பத், ஷாரிக், அபிநய் ஆகிய எட்டு பேர் நாமினேஷனில் இருக்கிறார்கள். இதில் ஷாரிக், அபிநய், சிநேகன் ஆகிய மூவரும் குறைந்த வாக்கு எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இதில் ஷாரிக் கடைசி இடத்தில் இருப்பதால் இவருடன் யார் வெளியேற இருக்கிறார் என்ற கேள்வி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

மேலும் நிகழ்ச்சியில் பிக்பாஸே இரண்டு பேர் வெளியேறுவார்கள் என சொல்லி இருப்பதால் ஷாரிக்குடன் அபிநய் வெளியேற வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். ஏனெனில் சிநேகன் கமலின் கட்சிக்கு நெருக்கமானவர் மற்றும் முந்தைய சீசனில் ரன்னரப்பாக தேர்வானவர் என்பதால் ஷாரிக்- அபிநய் இணை வெளியேற அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார்கள்.

யார் வெளியேற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *