y‘செந்நாய்’ படத்துக்கு மற்றுமோர் அங்கீகாரம்!

entertainment

இயக்குநர் ஜெயக்குமார் சேதுராமன் இயக்கிய செந்நாய் திரைப்படம், நேபாள கலாச்சார சர்வதேசத் திரைப்பட விழாவில் விருதினை வென்றுள்ளது.

அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் சேதுராமன் இயக்கிய செந்நாய் திரைப்படம், இந்திய சமூக அமைப்பில் இன்றைக்கும் ஆதிக்கம் செலுத்தி வரும் சாதிய அமைப்பு பற்றிப் பேசியிருந்தது. ஆண்டாள் பிரியதர்ஷினியின் தகனம் மற்றும் லீனா மணிமேகலையின் தெய்வங்கள் கதாபாத்திரங்களிலிருந்து ஈர்க்கப்பட்டு இந்தக் கதையின் நாயகியின் கதாபாத்திரத்தை இயக்குநர் ஜெயக்குமார் சேதுராமன் உருவாக்கியதாகக் கூறியிருந்தார். அந்தக் கதாபாத்திரத்தில் நடிகை செம்மலர் அன்னம் நடித்திருந்தார்

செந்நாய் திரைப்படம் ஏற்கெனவே போர்ட் பிளெயர் சர்வதேசத் திரைப்பட விழா 2021இல் சிறந்த அறிமுகத் திரைப்படத்திக்கான விருதினைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது, நேபாள கலாச்சார சர்வதேசத் திரைப்பட விழா 2021இல் சிறந்த சர்வதேசச் சிறப்பு மென்ஷன் விருதினைப் பெற்றிருக்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் ஜெயக்குமார் சேதுராமன், “சர்வதேசத் திரைப்பட விழாக்களில் செந்நாய் திரைப்படத்தைத் திரையிடும்போது பார்வையாளர்கள் இந்தியாவில் வேரூன்றிப் போன சாதிய அமைப்பு குறித்து புரிந்துகொள்வார்களா என்ற சந்தேகம் இருந்தது. நேபாளத்தில் உள்ள பார்வையாளர்கள் சரியாகப் புரிந்துகொண்டார்கள்” என்று கூறியுள்ளார்

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *