�இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு ஏற்படும் செலவுகளைக் குறைத்து, இவ்வகை பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஆகஸ்ட் 26ஆம் தேதி விஜயா வங்கி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க நிறைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
பணப் பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக இல்லாத காரணத்தால், டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடு கிராமப்புறங்கள் வரை ஊடுருவியுள்ளது. பணமில்லா பரிவர்த்தனைகளைப் பயன்படுத்த நாம் ஊக்குவிக்க வேண்டும். பணத்தால் தனி நபருக்கோ, சமுதாயத்துக்கோ எந்த பயனும் இல்லை. டிஜிட்டல் மயமாக்கத்துக்கு நிறைய வங்கிகளும், ஏ.டி.எம்-களும் தேவைப்படுகிறது. தற்போது டிஜிட்டல் முறைகள் கிராமங்கள் வரை ஊடுருவியுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.�,