நேற்றிரவு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தத் தொடரில் தொடக்கம் முதலே பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹைதராபாத் அணி வீரர்கள் இந்தப் போட்டியிலும் சிறப்பாகச் செயல்பட்டு மும்பை அணியை வீழ்த்த உதவினர். மும்பை அணியின் வீரர்கள் அனைவரையும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ரோகித் சர்மா நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரினை உயர்த்தினார். ரோஹித் ஷர்மா 45 பந்தில் 67 ரன் 6 பவுண்டரி, 2 சிக்சர் எடுத்தார். ஹைதராபாத் அணி சார்பில் சித்தார்த் கவூல் 3 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும், ரஷீத்கான், முகமது நபி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் 6 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் அதிரடியாக விளையாடிய தவான் 46 பந்துகளில் 62 ரன்களை சேர்த்தார். அதனால் ஹைதராபாத் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே-ஆஃப் சுற்றுக்குள் செல்லும் வாய்ப்பினை தன்வசம் தக்க வைத்துள்ளது ஹைதராபாத் அணி.�,