ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக மக்கள் தன்னெழுச்சியாக போராட்ட களத்தில் இறங்கியுள்ளார்கள். பள்ளி கல்லூரி மாணவர்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் குறிப்பாக பெண்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வருகின்றனர். தமிழர்கள் ஒவ்வொருவரும் முன்வந்து போராட்டத்தில் கலந்துகொண்டு எழுச்சியை உருவாக்கியது ஒரு புரட்சிகரமான போராட்டமாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
அனைத்து மீடியாக்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்துவரும் போராட்டத்தின் மீது முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்திவரும் நிலையில் ஜெயா டி.வி. மட்டும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்துவரும் போராட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் மிகவும் தீவிரமாக சென்று கொண்டிருப்பதால் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஜெயா டி.வி.யினரிடம், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக மாவட்டந்தோறும் மக்கள் கருத்துகளை கேட்டு ஒளிபரப்ப வேண்டுமென்று அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.�,