pவரும் 30ஆம் தேதி ஹோட்டல்கள் வேலைநிறுத்தம்!

public

ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு ஹோட்டல் சங்கத்தினர் வருகின்ற 30ஆம் தேதி ஒருநாள் முழுக்க வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருக்கின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு ஹோட்டல் சங்கத்தினர் கூறுகையில், ‘ ஏ.சி.வசதி உள்ள ஹோட்டல்களுக்கு வரி 8 ல் இருந்து 18 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பைக் குறைக்க வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம், வருகிற மே-30 ஆம் தேதி செய்ய இருக்கிறோம். இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பால், உணவுப்பொருட்களின் விலை ஏறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தான் பாதிக்கப்படுவர். ஆகவே தான், இந்த வரிவிதிப்பைக் குறைக்க வலியுறுத்தி போராடயிருக்கிறோம்’ என்றார்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஒரு லட்சம் ஹோட்டல்கள் பங்கேற்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *