oமூன்றாவது கண்ணைத் திறக்கும் நித்யானந்தா

public

தனது பக்தர்கள் 2021ஆம் ஆண்டு வரை உயிரோடு இருக்க வேண்டுமெனவும், அப்போது அவர்களது மூன்றாவது கண்ணைத் திறந்து வைக்கப்போவதாகவும் கூறியுள்ளார் நித்யானந்தா. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டெல்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் பனிப்புகை பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் சுகாதாரச் சீர்கேடுகளும் அன்றாடப் பணிகளில் தொய்வும் ஏற்பட்டு, அங்குள்ள மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மூன்றாவது கண்ணைத் திறந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளார் நித்யானந்தா. இது தொடர்பாக, இந்தியாடுடே இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நெற்றிக்கண் அல்லது மூன்றாவது கண் என்பதைக் கொண்டு, இரு கண்கள் மூடிய நிலையிலும் இந்த உலகில் நிகழ்பவற்றை, நம் புலன்களுக்கு அப்பால் உள்ளனவற்றைக் காணலாம் என்று இந்து மத புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது. தங்களைக் கடவுளர்களாக அழைத்துக்கொள்ளும் சன்யாசிகள் பலர், தேடிவரும் பக்தர்களின் மூன்றாவது கண்ணைத் திறந்துவைப்பதாகக் கூறுவது வழக்கம் தான்.

பாலியல் குற்றச்சாட்டு புகாரில் சிக்கியுள்ள நித்யானந்தாவும், தன்னைத் தேடிவரும் பக்தர்களின் மூன்றாவது கண்ணைத் திறந்துவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கூறி வருகிறார். மேற்கத்தியச் சிந்தனைகளில் இருந்து விலகியவர்களும், மோட்சத்தை அடைய வேண்டுமென்று திரிபவர்களும், இவரை நாடி வருவதாகக் கூறப்படுகிறது.

தனது பக்தர்கள் மத்தியில் நித்யானந்தா உரையாற்றும் நிகழ்ச்சிகள், வீடியோ பதிவுகளாகச் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படுகின்றன. சமீபத்தில் வெளியான வீடியோவொன்றில், இவரது கையிலிருந்து சக்தியானது ஒளிக்கீற்றாக வெளிப்படுவது போல கிராபிக்ஸ் காட்சிகள் நிரம்பிய இசைப்பாடல் ஒன்று வெளியானது. இந்த நிலையில், பக்தர்களுக்கு நித்யானந்தா வேண்டுகோள் விடுவது போல ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இதில், தன்னை நாடிவரும் பக்தர்களின் மூன்றாவது கண்ணைத் திறந்துவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார் நித்யானந்தா. “நீங்கள் எங்கிருந்தாலும் பரவாயில்லை, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பரவாயில்லை. உங்களுக்கு ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். அதற்காக, மூன்று ஆண்டுகள் நீங்கள் உயிரோடு இருக்க வேண்டும். எப்படியாவது உயிரோடு இருங்கள்” என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். நாம் உண்ணும் ரொட்டியானது வாய் வழியாகச் சென்று ரத்தத்தில் கலப்பதுபோல, எளிதாக நெற்றிக்கண்ணைத் திறந்து ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார். 2021ல் இது நடைபெறுமென்று தெரிவித்துள்ளார் நித்யானந்தா.

மூன்றாவது கண்ணைத் திறந்துவைப்பேன் என்றும், இதனை இலவசமாக மேற்கொள்வேன் என்றும் கூறியுள்ளார் நித்யானந்தா. தனது பேச்சு மூலமாக, 20ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாட்டை கேள்விக்கு உட்படுத்தியுள்ளார் நித்யானந்தா. இந்த வீடியோ மற்றும் இது குறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *