‘பாமக ஆட்சி அமைக்க கவர்னர் கூப்பிடுவார்’ என ராமதாஸ் பேசியது, ‘மே 19 மதுரையில் முதல்வராக பதவியேற்பேன்’ என கேப்டன் பேசி மெர்சலாக்கியது, கரூரில் பெருமளவில் பணம் சிக்கியது மற்றும் தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் குறித்து நெட்டிசன்களின் கருத்துக்கள்
// @ss_athish
பாமக ஆட்சி அமைக்க 20 தேதி அன்புமணியை கவர்னர் அழைப்பார் – ராமதாஸ் # இவங்ககிட்ட சிக்கிட்டு பொதுமக்கள் படாதபாடு படுறாங்க //
//@RameshTwts
மதுரையில் மே 19-ம் தேதி முதல்வராக பதவியேற்பேன் – விஜயகாந்த்
# 20-ம் தேதி அன்புமணி முதல்வராக பதவியேற்பேன்னு சொல்றார்?
அப்போ நமக்கு ரெண்டு முதல்வரா? //
// @arutperungo
தமிழகத்தின் விநியோக மையமாக கரூர் இருப்பதற்கான காரணம், கரூரிலிருந்து தமிழகத்தின் எந்தப்பகுதிக்கும் 6 மணிநேரத்தில் பயணிக்கலாம் //
//@blackhawk3271
25 நாட்களுக்கு பிறகு அன்புமணியால் புதிய தமிழகம் உருவாகும் – ராம்தாஸ் # அப்போ ஏற்கனவே இருக்கற ‘புதிய தமிழகம்’ கட்சியை என்ன பண்ண? //
//@naaraju
கேப்டன் இப்பல்லாம் ரொம்பக் குழறுதுன்னு திருமா பெயரைச் சொல்றதே கிடையாது. நேரடியா மொட்டையா அன்பு நண்பருக்கு மோதிரம் சின்னம்ன்னு சொல்லிடுறது.//
//@ConGainer
தேர்தல்வரை அதிமுக-வின் கொடுமைகள் தொடரும் நிலையிலும் திமுக-வுக்கு வாக்களிக்க தயக்கம் ஏற்பட கலைஞருடன் தயாநிதிமாறன் இருக்கும் போட்டோ போதுமானது //
//@thoatta
குடிக்கிறது தண்ணிய ஃப்ரிஜ்ல வச்சது போய், குளிக்கிறதுக்கு தண்ணிய ஃப்ரிஜ்ல வைக்கணும் போல//
// @Apallava
திமுக டப் கொடுக்குது
சென்னை அமிர்தா விளம்பரத்துக்கு //
//@Sakthivel_twitt
நல்லவேளை தேர்தல் 5 வருசத்துக்கு ஒருமுறை வருது… இல்லனா எல்லா கட்சி விளம்பரமும் சென்னை அமிர்தா விளம்பரத்த டார்ச்சர்ல தோக்கடிச்சிருக்கும் //
//@stanley469
சென்னை வெயில கூட தாங்கிடலாம் போல…
இந்த சென்னை அமிர்தா விளம்பரத்த மட்டும்…
அடேய் நீங்கலாம் நல்லா வரணும்டா 😉 //
// @Iam_SuMu
இனி அந்தம்மா வெளியே வரும்போது நமீதா சாஷ்டாங்கமா விழுந்து கும்பிடும்ல, திஸ் ரரக்கள் லக்கி பெல்லோவ்ஸ்//
// @mugathirai
என் வீடு சென்னையில தான், ரேஷன் கார்ட் சென்னையில தான், ஓட்டும் சென்னையில தான். – நமீதா. # கட்சியும் எனக்கு தான்னு சொல்ல போகுது!//
// நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
நான் ஈ படம் சன் டிவி-ல ஓடிக்கிட்டு இருக்கு…‘நான்தான் நானி’ அப்படின்னு சமந்தாகிட்ட ஈ தண்ணிய வச்சு எழுதி காட்டுது …
இங்கிலீஷ்ல எழுதாம தமிழ்ல எழுதுறத பாக்கும்போது…. முன்னாட்களில் ஈக்கள் கூட தமிழைதான் பயன்படுத்தி இருக்க வேண்டுமென்று தெரிகிறது. இன்னும் சிறிது ஆய்வு செய்து பார்த்தால் தமிழ் தேசியத்தின் முப்பாட்டன் ஒரு ஈ யாக இருக்க கூட வாய்ப்புள்ளது என வியக்கிறேன்.//
// வா.மு. கோமு
சுப்பிரமணி கால்கட்டுகளுடன் மருத்துவமனையில் கிடந்தான். பழனிச்சாமி அவன் அருகில் முகத்தை தொங்க வைத்து அமர்ந்திருந்தான்.
– நேத்து நடந்தது ஞாவகம் இருக்கா சுப்பிரமணி?
– இல்லியே! இங்க ஏன் கிடக்கேன் நானு? காலு அவுட்டு போல?
– டாஸ்மார்க் பார் சுவத்துல ஏறி எல்லோருக்கும் பறந்து காட்டுறன்னு சொல்லி ஏறிட்டேடா நீ!
– என்னை தடுத்து தொலஞ்சிருக்கலாம்ல நீ?
– நானும் உங்கூட சேர்ந்து தான குடிச்சேன் முட்டாள்! ஒருவேளை நெசமாவே பறந்துடுவியோன்னு நெனச்சிட்டேன்!//
�,