பெண்களுக்குத் தேவையான அளவில் வாய்ப்புகளையும் வசதிகளையும் வழங்கினால், அவர்களால் இந்தியாவை இரண்டாம் பசுமைப் புரட்சியை நோக்கிச் செலுத்த முடியும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
’ராஷ்ட்ரிய மகிளா கிசான் திவாஸ்’ கொண்டாட்ட நிகழ்ச்சியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “அரசு தனது பல்வேறு கொள்கைகளால் இயற்கை விவசாயம், சுய வேலைவாய்ப்புத் திட்டம், பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் பெண்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கிவருகிறது. வேளாண் துறையில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்” என்று பேசினார்.
உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தகவலின் படி, இந்தியாவில் வேளாண் துறையில் பெண்களின் பங்களிப்பு 32 சதவிகிதமாக உள்ளது. வேளாண்மை சார்ந்த 48 சதவிகிதப் பணிகளில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். பால் உற்பத்தி, கால்நடை மேலாண்மை போன்ற பணிகளில் 7.5 கோடி பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். 2016-17ஆம் ஆண்டில் பெண்கள் குறித்த 21 நுட்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த பணிகளில் 2.56 லட்சம் பெண்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாகவும் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.�,