மூளையில் தோன்றும் வார்த்தைகளைக் கணினிகளில் பதிவிடும் வசதியைப் புதிய கருவிகொண்டு கண்டறிந்துள்ளனர்.
கற்பனை கதைகளைக் கேட்கும்போது, அதில் வரும் சில தொழில்நுட்பங்கள் வியப்பில் ஆழ்த்துவது உண்டு. அதன்படி திரைப்படங்களில் தோன்றும் சில அதிநவீன தொழில்நுட்பங்கள் நிஜ வாழ்வில் இருந்தால் எவ்வாறு இருக்கும் எனச் சிந்தனை செய்து கொண்டிருக்கும் வேளையில் அதற்கான பணிகளும் ஒருபுறம் நடைபெற்று தான் வருகிறது.
தானியங்கி கார், செயற்கை நுண்ணறிவு ரோபோ என பல்வேறு புதுமைகள் தற்போது வெளியாகி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக MIT-யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் கண்டறிந்துள்ள புதிய கருவியானது பயனர்கள் மௌனமாக இருக்கும்பட்சத்தில் அவரது மூளையில் சிந்திக்கும் வார்த்தைகளைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மனிதனின் மூளையில் சிந்தனை செய்யும்போது ஏற்படும் ரசாயன மாற்றம்கொண்டே இந்தக் கருவி செயல்படுகிறது. இந்தக் கருவியானது கூகுள் நிறுவனத்தில் அசிஸ்டன்ஸ் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் சிறி போன்ற வசதிகளைக் கொண்டு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி மூலம் எந்தந்த செயல்களை மேற்கொள்ள முடியும் என்பதை விளக்க [ஒரு வீடியோ பதிவினையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.](https://youtu.be/RuUSc53Xpeg)
தற்போது வரை இந்தக் கருவியானது நேவிகேஷன் உதவிக்கும், சிறு சிறு கூகுள் அசிஸ்டென்ட் வசதிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். விரைவில் இந்தக் கருவியானது அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கருவியானது வெளியாகும்பட்சத்தில் வாய் பேச இயலாத நபர்களுக்கு உதவும் வகையில் அமையும்.�,