bதீபாவளி: ஷ்ரத்தாவின் சோஷியல் மெசேஜ்!

public

பட்டாசு வெடித்துப் புகை மண்டலத்தை உருவாக்காதீர்கள் என்று பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா கபூர். பாகுபலி படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்துவரும் சாஹோ படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தென்னிந்தியத் திரைத்துறைக்கு ஷ்ரத்தா அறிமுகமாகவுள்ளார்.

இவர் தற்போது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், **”தீபாவளி என்பது ஒளியின் திருநாளே தவிர இரைச்சலுக்கும், சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்குமான நாள் அல்ல. பட்டாசு வெடித்துக் காற்றை மாசுபடுத்தாதீர்கள். தெருக்களில் ஆதரவின்றிச் சுற்றித் திரியும் விலங்குகளை அச்சுறுத்தாதீர்கள்”** என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மனிதர்களின் செயல்பாடுகளால் விலங்குகள் பாதிக்கப்படுவதை எப்போதுமே எதிர்த்துவரும் ஷரத்தா, மீன்களைப் பாதுகாக்க கடல் கன்னி போல உடையணிந்து பீடா (Peta) நிறுவனத்துடன் சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

[ஷ்ரத்தாவின் சோஷியல் மெசேஜ்](https://twitter.com/twitter/statuses/918800438413152257)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *