பொதுவாக, மாணவர் சேர்க்கை என்பது பள்ளிகளில் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடைந்துவிடும். அதற்குமேல் எந்த பள்ளிகளிலும் மாணவர்களை புதிதாக சேர்க்கமாட்டார்கள். அடுத்த ஆண்டில்தான் சேரமுடியும்
இந்த நிலையில், மாணவர் சேர்க்கை தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை புதிய நடைமுறை ஒன்றை அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது.
அதன்படி, எல்கேஜி முதல் ஒன்பதாம் வகுப்புகளில் இறுதி தேர்வுக்கு முன்புவரை மாணவர் சேர்க்கையை நடத்தலாம். முதற்கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த வாய்மொழியாக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா காரணமாக பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்வுவரை மாணவர் சேர்க்கை நடத்தினால் பல்வேறு சிக்கல்கள் எழும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
**-வினிதா**