ரயில்வே: உள்கட்டமைப்பில் அடுத்த 5 ஆண்டுகளில் $140 பில்லியன் முதலீடு

public

எம்சிசி சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரி என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்துகொண்டு பேசியதாவது, “இந்தியன் ரயில்வேஸ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உள்கட்டமைப்பில் 140 பில்லியன் டாலர் முதலீடு செய்யப் போகிறது. நாங்கள் ரூ.94,000 கோடி முதலீடு செய்திருக்கிறோம். தற்போது கூடுதலாக ரூ.40,000 கோடி லோகோமோடிவ் ஒப்பந்தத்துக்காகச் செலவிட திட்டமிட்டிருக்கிறோம். தற்போது இந்தியாவின் மொத்த ஜிடிபி-யில் 10லிருந்து 11 சதவிகிதம் உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. நாங்கள் அதிவேக ரயில் சேவைத் திட்டத்துக்காக ரூபாய் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்தை இறுதி செய்துள்ளோம். மூன்று சரக்கு ரயில்களும் இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட உள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரயில்வே நிறுவனங்கள் தங்களது மொத்த வருவாயில் 30 சதவிகிதத்தை பயணக்கட்டணம் அல்லாத சேவையில் இருந்து பெறுகிறார்கள். இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு சரக்குக் கட்டணம் வழியாகவும், ஒரு பங்கு பயணிகள் மூலமாகவும் வருகிறது. மாநில அரசுகள் மத்திய அரசோடு இணைந்து ரயில் நிலைய உருவாக்கம் மற்றும் மறு கட்டமைப்பில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்” என்றார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *