[போயஸ்கார்டனில் சிவாஜி குடும்பம் !

public

நடிகர் பிரபு அவரது அண்ணன் ராஜ்குமார் மற்றும் சிவாஜி குடும்பத்தினர் அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக சசிகலாவை அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்தனர். அந்த தீர்மான நகலை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போயஸ்கார்டன் சென்று சசிகலாவிடம் வழங்கினார்.பொதுக்குழு கோரிக்கையை ஏற்று பொதுச்செயலாளராக பொறுப்பேற்க சசிகலா சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து நேற்று மதியம் 12 மணிஅளவில் அதிமுக தலைமை அலுவலகம் வந்த சசிகலா முறைப்படி பொதுச் செயலாளராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதற்கு அரசியல் கட்சியினர் பெரும்பாலும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சசிகலா பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அமைதியாக இருந்துவிட்டார். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் பிரபு அவரது அண்ணன் ராஜ்குமார் மற்றும் சிவாஜி குடும்பத்தினர் போயஸ் கார்டன் இல்லம் வந்தனர். அங்கு அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மறைந்த ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக அறிவிக்கப்பட்ட சுதாகரன் சிவாஜி குடும்பத்தில் இருந்து தான் பெண் எடுத்திருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *