நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ரா.முத்தரசன், வாக்காளர்களை பணம் பெற்றுக்கொள்ளுமாறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில், மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த பிரேமலதா பேசியிருப்பதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘வாக்குக்கு பணம் கொடுப்பதென்பது தவறு. அந்தத் தவறை யார் செய்தாலும் தடுத்து நிறுத்துவோம். இந்தக் கேள்விக்கான பதிலை பிரேமலதாவிடமே கேட்டுக்கொள்ளுங்கள். தமாகா உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கிறோம். அந்தக் கட்சிகளின் பெயரை வெளியிட்டு அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த விரும்பவில்லை” என்று கூறினார்.�,
+1
+1
+1
+1
+1
+1
+1