டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் உலகளவில் புகழ் பெற்றது. 1969இல் தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று சர்ச்சைகள் ஏற்பட்டது.
இந்நிலையில், 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த பல்கலைக்கழக பார்வையாளர் விருதை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் வென்றுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்கள் மத்தியில் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கவும் மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவதற்கு, அவர்களை ஊக்குவிக்கவும், கடந்த 2014ஆம் ஆண்டு, சிறந்த பல்கலைக்கழக பார்வையாளர் விருதுகளை இந்திய குடியரசுத் தலைவர் தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தன் ட்விட்டர் பக்கத்தில், ‘ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் சிறந்த பல்கலைக்கழக பார்வையாளர் விருதை வென்றுள்ளது’ என பதிவிட்டுள்ளார். இந்த விருது வழங்கும் விழா மார்ச் 6ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இரண்டு பார்வையாளார் விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.�,