மணிரத்னம் இயக்கத்தில் அடுத்து உருவாகும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
மிகப் பெரிய பட்ஜெட்டில், அதிகமான நட்சத்திரங்களைக் கையில் வைத்துக்கொண்டு இயக்கும் படம் என்பதால், தான் உருவாக்கிய கேரக்டர்களுக்கான மேனரிசம் மற்றும் கொடுக்க வேண்டிய அழுத்தங்கள் குறித்த பயிற்சி வகுப்புகளைச் சென்னையிலுள்ள தனது அலுவலகத்தில் நடத்திவருகிறார் மணிரத்னம். அதன் தொடர்ச்சியாக, நடிகர் சிம்புவுக்கான பயிற்சிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. அப்போது மணிரத்னத்துடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை சிம்பு நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
சிம்பு வெளியிட்ட செல்ஃபியையை அடுத்து, அந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாகத் திரையுலகில் தகவல் பரவியதால், AAA படத்தின் படப்பிடிப்புக்குச் சரிவர ஒத்துழைக்காததால் விசாரணையிலிருக்கும் சிம்புவின் மீதான புகாருக்கு முடிவு கிடைக்கும் முன்பே எப்படி ஷூட்டிங்கைத் தொடங்கலாம் என்று சர்ச்சையாக்கப்பட்டது. இதன் காரணமாக மணிரத்னம் படத்தில் நடிப்பதற்கான பயிற்சி வகுப்பில் சிம்பு கலந்துகொண்டுள்ளார் என்ற தகவல் அதிகாரபூர்வமாகத் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.�,”