குடியரசுத் தலைவர் தேர்தல்: ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள்!

public

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து குடியரசுத் தலைவர் பதவிக்குப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாடு முழுவதும், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில், நாடாளுமன்ற எம்.பி-க்கள், மாநில எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வார்கள். தற்போது நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்துவரும் பாஜக, 13 மாநிலங்களில் ஆளும்கட்சியாகவும் உள்ளது. எனவே, பாஜக இத்தேர்தலில் வெற்றிபெறும் நிலையில் உள்ளது.

இதனால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரைத் தேர்தலில் நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. அதையேற்று, சோனியா காந்தி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளைச் சந்தித்து வருகிறார். ஏற்கெனவே அவர், ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் நிதிஷ்குமார், சரத்யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அடுத்த கட்டமாக மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோருடன் பேச்சு நடத்த சோனியா திட்டமிட்டுள்ளார். மாநில கட்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தவும் சோனியா முடிவு செய்துள்ளார். இந்த நிலையில், காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா நேற்று சோனியாவைச் சந்தித்து இதுதொடர்பாக பேசினார்.

முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி, லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளம், சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டீரிய சமிதி, பிஜு ஜனதா தளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கட்சிகளையும் தங்கள் அணியில் இடம் பெற காங்கிரஸ் தலைவர்கள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மாநில கட்சித் தலைவர்களுடன் இதுகுறித்து பேசி வருகிறார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *