}கலாபவன் மணி மரணம்; கல்லீரல் பலவீனம் என அறிக்கை!

public

மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை சாலக்குடி புழாவின் ஓரத்தில் உள்ள தன் பூர்வீக வீட்டில் இருந்த போது மயக்கமடைந்தார். பின்னர், திருச்சூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்தார். மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவருடைய தம்பி ராதாகிருஷ்ணன் புகார் அளித்தார். திருச்சூர் போலீசார் விசாரணை செய்ததில், அன்று இரவு மலையாள நடிகர் ஜாபர், கலாபவன் மணியுடன் மது அருந்தியது தெரியவந்தது. இதனையடுத்து, ஜாபரை போலீஸார் விசாரணை செய்ததில், சேர்ந்து மது அருந்தியது உண்மைதான் என ஒத்துக் கொண்டார்.ஜாபரிடம் போலீசார் விசாரித்தது அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்திய போதிலும் வேறு எந்தக் குற்றச் செயல்களும் அங்கு நடைபெற வில்லை என்பதால் ஜாபர் விடுவிக்கப் பட்டார். இந்நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கலாபவன் மணியின் கல்லீரல் பலவீனமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனால், கலாபவன் மணியின் மரணம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *