‘சென்னை 28 படத்தில் செல்வியாகப் பார்த்த விஜயலக்ஷ்மியா இவங்க?’ என்று ஆச்சர்யப்படும் விதத்தில் தயாரிப்பாளராக ‘பண்டிகை’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் களமிறங்கியிருக்கிறார். மொத்த திரையுலகத்தின் சப்போர்ட்டுடன் வெளியாகக் காத்திருக்கும் பண்டிகை திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜயலக்ஷ்மி தனது தயாரிப்பாளர் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது…
**நான் நடிக்கப் போறேன்னு சொன்னப்பகூட என் குடும்பம் முதற்கொண்டு எல்லார்கிட்ட இருந்தும் எனக்கு ஆதரவு கிடைச்சது. ஆனால், படம் தயாரிக்கப் போறேன்னு சொன்னதும் எல்லோரும் சொன்ன அட்வைஸ் வேண்டாம் என்பதுதான். கிருஷ்ணா படத்துல கேரவன்கூட போகாம கடுமையா உழைச்சிருக்கான். இந்த படத்தோட டெக்னீஷியன்ஸ் கிட்ட ஒரு பெரிய போட்டியே இருந்தது. அது சிறப்பான படத்தைக் கொடுக்கணும் என்பதுதான். இந்தப் படம் ரிலீஸுக்குப் பிறகு, இன்னும் நான்கு படங்கள் தயாரிக்க ஆசை** என்று கூறினார் தயாரிப்பாளர் விஜயலக்ஷ்மி.
�,”