�
எகிப்து நாட்டில் நடைபெறும் சர்வதேச ஜவுளிக் கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த 15 ஜவுளி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று 60ஆவது சர்வதேச ஃபேஷன் மற்றும் ஜவுளிக் கண்காட்சி தொடங்கியது. அதில் இந்தியா சார்பாக 15 நிறுவனங்கள் கலந்துகொண்டு அவற்றின் பருத்தி நுாலிழை, ஜவுளி, ஆடைகள், வீட்டு பயன்பாட்டு ஜவுளி வகைகள் உள்ளிட்ட பல்வேறு ஜவுளி வகைகளை, காட்சிக்கு வைத்துள்ளன. முன்னதாக இந்தியாவின் எகிப்து தூதர் சஞ்சய் பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘உலகளவில் அதிகமாக பருத்தி உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் பருத்தி மற்றும் ஜவுளி வகைகளுக்கு, சர்வதேச நாடுகளில் அதிக வரவேற்பு காணப்படுகிறது.
இந்திய ஜவுளித் துறை அனைத்து தரத்திலும், மொத்தமாகவும் சில்லறையிலும் ஜவுளி வகைகளை தயாரித்து அளிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது. கடந்த 2016ல், இந்தியாவிலிருந்து, 29.70 கோடி டாலர் மதிப்புள்ள ஜவுளிகள் மற்றும் ஆடைகள், எகிப்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதிநவீன இயந்திரங்கள் மூலம் புதிய வடிவமைப்புகளில் ஜவுளி வகைகள் மற்றும் ஆடைகள் உருவாக்குவதில், இந்தியா சிறந்து விளங்குகிறது” என்று கூறினார்.�,