தாய்லாந்தில் விக்னேஷ்சிவன் – நயன்தாரா

entertainment

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது தாய்லாந்தில் உள்ளனர்.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த 9ஆம் தேதி சென்னை, மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என நெருங்கிய வட்டாரம் மட்டுமே இவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணம் முடித்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களுக்கு கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தனர்.

திருப்பதியில் திருமணம் முடித்த அடுத்த நாளே சாமி தரிசனத்துக்கு சென்றனர். நயன்தாரா திருமணம் முதலில் திருப்பதியில் தான் நடப்பதாக இருந்தது. ஆனால் 150 பேருக்கு மேல் கலந்து கொள்ள முடியாது என்பதால் அவர்கள் திருமணத்தை சென்னையில் மாற்றி வைத்தனர். திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்காக சென்றபோது நயன்தாரா காலணியுடன் சென்றதாக சர்ச்சை எழுந்தது. பின்னர் விக்னேஷ் சிவன் தவறுதலாக நடந்து விட்டது என மன்னிப்பு கோரினார்.

இதன்பிறகு தம்பதிகள் இருவரும் கேரளாவிற்கு நயன்தாரா வீட்டிற்கு சென்றனர். இப்போது இருவரும் தாய்லாந்துக்கு தேனிலவுக்காக சென்று உள்ளனர். இதனை விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதுமட்டுமில்லாமல் ரசிகர் ஒருவர் நயன்தாரா- விக்னேஷ் சிவனுடன் எடுத்த புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

நயன்தாரா நடிப்பில் ‘O2’ திரைப்படம் ஓடிடியில் நேரடியாக முன்பு வெளியானது. இது மட்டுமில்லாமல் பாலிவுட்டில் ஷாருக்கான்- அட்லி திரைப்படம், தமிழில் ‘கனெக்ட்’ மலையாளத்தில் ‘கோல்டு’ திரைப்படம் ஆகியவை அவரது கைவசம் உள்ளன. திருமணத்திற்கு பின்பு கதை சார்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்க கூடிய படங்களில் மட்டும் நயன்தாரா நடிப்பார் என தெரிகிறது. அதேபோல விக்னேஷ் சிவன், அஜித்தின் 62வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க இருக்கிறது.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *