Qதிடீரென மயங்கி விழுந்த சீமான்

politics

சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்களை சந்தித்த பின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளுக்காக அங்குள்ள குடியிருப்பு பகுதிகள் அகற்றும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அப்பகுதிகளில் உள்ள வீடுகளை இடிப்பதற்காக இன்று மீண்டும் ரயில்வே துறையினர் சார்பாக ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. மாற்று இடங்கள் வழங்கப்படுவதற்கு முன்னதாக வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அப்பகுதிக்கு இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் நிறைவில் திடீரென்று சீமான் மயங்கி விழுந்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நாம் தமிழர் கட்சியினர் உடனடியாக, அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *