.
இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 34 நாட்களாக நாடு முழுவதும் நாடடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. நாள்தோறும் சராசரியாக 1000-2000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். எனினும் மற்ற நாடுகளைப் போல அல்லாமல் இந்தியாவில் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. கொரோனா பரவல் விகிதமும் கட்டுக்குள் உள்ளது.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று ( ஏப்ரல் 29) வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,332 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1007 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7695 ஆக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “கடந்த 24 மணி நேரத்தில் 1897 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 72 பேர் உயிரிழந்துள்ளனர்.” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டிலேயே கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களில் 60 சதவிகிதம் பேர் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 400 பேர் உயிரிழந்துள்ளனர். 9318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் 3744 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 181 பேர் உயிரிழந்துள்ளனர்.
**எழில்**�,”