�
31 வயதே ஆகும் இளம் மலையாள திரைப்பட இயக்குநர் ஜிபித் ஜோர்ஜ் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பாக, மார்ச் 6 ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் ‘கோழிப்போரு’. வீணா நந்தகுமார், இன்திரன்ஸ், போலி வல்சன், அஞ்சலி நாயர் உள்ளிட்டவர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்தப்படத்தை ஜிபித் ஜோர்ஜ் மற்றும் ஜினோய் ஜனார்த்தனன் ஆகிய இருவரும் இணைந்து இயக்கி இருந்தனர். இந்தத் திரைப்படத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஜிபித் ஜோர்ஜுக்கு நேற்று(மே 9) திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
தொடர்ந்து மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் அருகில் உள்ள அங்கமாலி லிட்டில் ஃபிளவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்களால் இயலவில்லை.
லாக்டவுன் முடிவுக்கு வந்த பின்னர், மீண்டும் தனது திரைப்படத்தை ரிலீஸ் செய்ய ஜிபித் திட்டமிட்டு இருந்த நேரத்தில் அவர் மரணமடைந்த செய்தி ரசிகர்களையும், திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,